கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த நஞ்சன்குடி பகுதியில் கடந்த ஜனவரி 2 ம் தேதி 10 வகுப்பு மாணவன் ஒருவன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நஞ்சன்குடி தாலுகாவில் உள்ள ஹலேபுரா ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட அந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதே பகுதியைச் சேர்ந்த சித்தராஜுவின் மகன் மகேஷ் என்பது தெரியவந்தது.

சந்தேகத்திற்கிடமான இந்த மரணம் குறித்து போலீசாரிடம் புகாரளித்த சித்தராஜு இது நரபலி போன்று உள்ளதாக புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் மீது விசாரணை நடத்தியதில், மந்திரவாதியாகும் ஆசையில் மகேஷ் உடன் படித்த சக மாணவர்கள் நான்கு பேர் அவனை ஏரி பகுதிக்கு அழைத்து சென்று அங்கு பூஜை நடத்தியதோடு பூஜைக்குப் பின் அவனை ஏரியில் தள்ளி கொன்றுள்ளனர்.

அமாவாசை இரவில் நடந்த இந்த பூஜை குறித்த தடயங்களை சேகரித்த போலீசார் மாணவர்கள் நால்வர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

10 ம் வகுப்பு மாணவன் நரபலி விவகாரம் கர்நாடகாவில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.