தரதஹள்ளி

கர்நாடக மாஇல முன்னாள் சபாநாயகர் டி பி சந்திர கவுடா, சிகமக்ளூர் மாவட்டத்தின் தரதஹள்ளியில் உள்ள அவர் இல்லத்தில் மரணம் அடைந்தார் 

கடந்த 1936ஆம் ஆண்டு பிறந்த டி பி சந்திரகவுடா மிக நீண்ட அரசியல் அனுபவம் உடையவர் ஆவார். இவர் மூன்று முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை சட்டமேலவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த 1978 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திர கவுடா, அவரது சிக்மகளூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போட்டியிடுவதற்காகத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பிறகு காங்கிரஸ் சார்பில் சட்டமேலவை உறுப்பினராக 1978 முதல் 1983 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.  பிறகு திடீரென ஜனதா தளம் கட்சியில் இணைந்த சந்திர கவுடா 1983 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை கர்நாடக சட்டப்பேரவை தலைவராகப் பதவி வகித்தார்.

அதன் பின்பு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

மறைந்த டி பி சந்திர கவுடா  கர்நாடக மாநில அரசியலில் வெவ்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ், ஜனதா தளம், ஜனதா கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, கர்நாடக கிராந்தி ரங்கா, பாரதிய ஜனதா கட்சி என பல்வேறு அரசியல் கட்சிகளில் இவர் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.