பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு தான் என்று முதல்வர் சித்தராமையா தகவல்

பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் குண்டலஹள்ளி கிளையில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் வெடிகுண்டு வெடித்தது.

மதிய நேரம் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்த நேரத்தில் இந்த வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

முதலில் ஹோட்டலில் உள்ள சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததை உறுதி செய்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த உள்துறை அமைச்சர் இதுதொடர்பான விசாரணையை நேரடியாக கண்காணித்து வந்தார்.

இந்த நிலையில் உணவகத்தில் வெடித்தது அதிவீரியம் வாய்ந்த IED வெடிகுண்டு தான் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம்…