கொல்கத்தா

இன்று இரவு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார்.

பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர், ஹுக்ளி மற்றும் நாடியா மாவட்டங்களில் இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். மேலும் பல்வேறு அரசு திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.

இன்று இரவு பிரதமர் மோடி கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்க உள்ளார். அப்போது பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநர் மாளிகைக்கு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு நெறி முறைப்படி  நடைபெறுகிறது என்றும் சந்திக்கும் நேரம் குறித்து எந்த தகவலும் இல்லை எனத் தெரிய வந்ததுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டிசம்பரில், மம்தா பானர்ஜி டில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து மாநிலத்தின் நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தினார் என்பதும் மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு ரூ.1.18 லட்சம் கோடி பாக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.