பெங்களூரு’

ர்நாடக முதல்வர் சித்தராமையா அம்மாநிலச் சட்டசபைக்கு வெலியே தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த அண்டு கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக கர்நாடக அரசு அறிவித்தது.

வறட்சியால், பயிர்கள் சேதமடைந்தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு 18 ஆயிரத்து 171 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது.

கர்நாடக அரசுக்கு வறட்சி, நிவாரணப் பணிக்காக மத்திய அரசு 3 ஆயிரத்து 454 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இது கர்நாடக அரசு விடுத்த கோரிக்கை தொகையை விட மிகக்குறைவாகும்.

எனவே வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி இழைத்துள்ளதாகக் கூறி கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார்,மற்றும் அமைச்சர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைவரும் கர்நாடக சட்டசபை வளாகத்திற்கு வெளியே திரண்டு கையில் சொம்பு ஏந்தி மத்திய அரசுக்கு எதிராகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி கர்நாடகாவில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.