டெல்லி

ரவிந்த் சிங் டெல்லி மாநிலம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.

தற்போது நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதியும், 2 ஆம் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதியும் வரும் 7, 13, 20,25  ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 25ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. முக்கிய கட்சிகளாக உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவை இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதிலும் டெல்லியில் தனித்து போட்டியிடுகின்றன.

இன்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியா, டெல்லி காங்கிரஸ் உள்விவகாரத்தில் தலையிடுவதாக கூறி அ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்ந்து தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி அழுத்தம் வருவதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்துள்ளார். டில்லியில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.