பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடும் காய்ச்சல் காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடியூரப்பா அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது.

எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்படுவது இது இரண்டாம் முறையாகும். இதையடுத்து, பெங்களூருவில் உள்ள வேறொரு மருத்துவமனைக்கு எடியூரப்பா மாற்றப்படுகிறார்.

முன்னதாக கர்நாடகத்தில் பரவி வரும் கொரோனா குறித்து முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. அதில், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.