பெங்களூரு

ர்நாடக பாஜகவின் மூத்த பெண் தலைவர் தேஜஸ்வினி கவுடா காங்கிரசில் இணைந்துள்ளார்.

கர்நாடக மாநில பாஜக மேலவை உறுப்பினரும் மூத்த பெண் தலைவருமான தேஜஸ்வினி கவுடா, அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.  அவர் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமையகத்தில், பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மாநிலத் தலைவர் பவன் கேரா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஏற்கனவே 2004 -2009 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தேஜஸ்வினி கவுடா 2014 ஆம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்து 2018 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த அவரது மேலவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூன் 2024 இல் முடிவடைய இருந்தது. தற்போது அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வினி கவுடா,

“பாஜக அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை.  ஆனால் காங்கிரஸ் கட்சி வெறும் வார்த்தைகளோடு மட்டுமல்லாமல், செயல் மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் கட்சியில் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் 23 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்” 

என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,

“கர்நாடக அரசியலில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர் காங்கிரசில் இணைந்ததில் மகிழ்ச்சி. வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தேஜஸ்வினி கவுடா சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என்று நம்புகிறோம். தேஜஸ்வினி 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து பல்வேறு பிரச்சினைகளில் குரல் கொடுத்து வருகிறார். அவர் காங்கிரசுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி” 

என்று கூறினார்.