டில்லி

மது குரலை பாஜகவால் ஒடுக்க முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராம்லீலா மைதானத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ராகுல்காந்தி தனது உரையில்,

”காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு சுவரொட்டி அடிப்பது உள்ளிட்ட வேலைகள் உள்ள நிலையில், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி இந்தத் தேர்தலில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுகிறார். 

பாஜகவினர் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தும்  சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறையை வைத்து நாட்டை நடத்தவும் முயல்கிறார்கள்.  தேர்தலில் போட்டியிட விடாமல் என்னைத் தடுக்க பா.ஜ.க. சதி செய்கிறது. காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம், மாநில முதல்வர்கள் கைது என ஜனநாயக விரோதப் போக்கை பா.ஜ.க. மேற்கொள்கிறது. 

என்னுடைய குரலை பாஜகவால் ஒடுக்க முடியாது. ஏழைகளுக்கு இந்திய அரசியல் சட்டம் பல உரிமைகள் வழங்கியிருக்கிறது. மின்னணு இயந்திரம் இல்லாமல் பா.ஜ.க வால் 180 இடங்களைக் கூட வெல்ல முடியாது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று அரசியல் சட்டத்தை மாற்றினால் நாடு தீப்பற்றி எரியும். அரசியல் சாசனம் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்காவிட்டால் சிதைக்கப்படும்.” 

என்று கூறி உள்ளார்.