பெங்களூரு

இன்று மாரடைப்பால் மரணம் அடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

கன்னடப் பட உலகில் சூப்பர் ஸ்டாரான நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இன்று காலை உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.  அவர் உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையான விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.   இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது.  அவரது மறைவு கர்நாடக மாநிலத்தில் கடும் சோகத்தை உண்டாக்கி இருக்கிறது.  அவருக்கு தற்போது 46 வயது ஆகிறது.

தற்போது வந்துள்ள தகவலின்படி புனித் ராஜ்குமாரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.   ஒருவர் இறந்த பிறகும் அவரால் தனது கண்களை மற்றவருக்கு அளிப்பதன் மூலம் உலகில் உயிர் வாழ முடியும் எனச் சொல்வது தற்போது மெய்யாகி புனித் ராஜ்குமார் இனியும் தனது கண்கள் மூலம் உயிர் வாழுவார் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.