திருச்செந்தூர்

திமுக வேட்பாளர் கனிமொழி மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இருக்காது எனக் கூறி உள்ளார்.

தூத்துக்குடி வேட்பாளரும் தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான கனிமொழி திருச்செந்தூர் அருகே பிரசாரம் செய்தபோது.

”சிறுபான்மை மக்களுடன் எப்போதும் இருக்க கூடிய கட்சிகள், அவர்களுக்காகப் பாடுபடக்கூடிய கட்சிகள் இந்தியா கூட்டணி இடம்பெற்றுள்ள கட்சிகளாகும். பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது. 

தேவையில்லாத சட்டங்களைக் கொண்டு வந்து சிறுபான்மையினருக்குப் பல்வேறு கஷ்டங்களைக் கொடுத்தது பா.ஜ.க. ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாநாட்டில் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இருக்காது. எனவே இந்தியா கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும். 

பெட்ரோல் ரூ.75-க்கு விற்கப்படும். இன்னும் பல்வேறு சலுகைகள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவா று நிறைவேற்றப்படும். புன்னக்காயல் கிளை தபால் நிலையத்தைத் துணை தபால் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.” 

என்று உரையாற்றி உள்ளார்.