விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிகளில் கலந்துகொள்ளும் தமிழக அணிக்கு நடிகர் கமல்ஹாசன், பிராண்ட் அம்பாசிடர் ஆகியிருக்கிறார். இந்த அணியின் உரிமையாளர் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.

 

விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிகள்  வரும் ஜூலை 28-ம் தேதி தொடங்குகிறது. 11 மாநிலங்களில் இருந்து 12 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் 130 ஆட்டங்கள் சுமார் 13 வார காலம் நடைபெற இருக்கின்றது.

இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் கலந்து கொள்ள இருக்கின்றன.

இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த மாதம் நிறைவு பெற்றது. மொத்தம் ரூ.46.99 கோடிக்கு 227 வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக ஏலம் எடுக்கப்பட்டு உள்ளனர். இதில் தமிழக அணியின் இணை உரிமையாளராக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார்.

தமிழக அணி பாஸ்கரன் தலை மையில் சென்னையில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வரு கிறது. இந்நிலையில் தமிழக அணிக்கு ‘தமிழ் தலைவாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளதாக சச்சின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணிக்கு நடிகர் கமல்ஹாசன் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.