வாஷிங்டன் :

லகப் புகழ் பெற்ற அமெரிக்க ஹார்வர்டு பல்கலையில் இந்தியாவின் வளர்ச்சி, சவால்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசுகிறார்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலை உலகப்புகழ் பெற்றது. இங்கு  இந்திய கருத்தரங்கு வருடந்தோறும் நடத்தப்படுகிறது. இதன், 15வது வருட  கருத்தரங்கு,  வரும் பிப்., 10, 11 ஆகியே தேதிகளில்  நடக்க இருக்கறது.

இதன் ஒருபகுதியாக,  கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய வர்த்தகத் துறை அமைச்சருமான சுரேஷ் பிரபு, காங்கிரஸ் கட்சியைச்  சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோருடன்  நடிகர் கமல்ஹாசனும்  பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் வளர்ச்சி, சவால்கள் குறித்து இவர்கள் உரையாற்றுவார்கள். மேலும்  பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்கள்.

தவிர, கருத்தரங்கில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில், தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ், பா.ஜ.க.,வைச் சேர்ந்த, எம்.பி., பூனம் மகாஜன், நடிகையும் காங்கிரசின் சமூக ஊடக பிரிவின் தலைவருமான திவ்யா ஸ்பந்தனா, பிரபல தொழிலதிபர் நிதின் பராஞ்ச்பே உள்ளிட்ட பலர் உரையாற்ற இருக்கிறார்கள்.