விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 83 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹவுஸ்மேட்ஸ்களுக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. மேலும் யார் டைட்டில் வின்னராக இருக்க போகிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்களும் விவாதித்து வருகின்றனர்.

ஒளவையார் போல பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவர்..என பேச தொடங்கிய கமல், ‘தப்பா சொல்லிடனோ. இந்த பருப்பு மேட்டரு கொண்டு வந்திருக்க கூடாது என கிண்டலாக சொல்கிறார். அதன் பின் பாலாஜி என்ன நடந்தது என சம்பவத்தை விவரிக்க தொடங்குகிறார். உடனே கமல் நாங்க பாத்துட்டோம் அதை, தெரியாமல் கேட்கவில்லை என சொல்கிறார்.

கடந்த வாரம் ஆரியுடன் அனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இதன் எதிரொலியாகவே அனிதா சம்பத் இந்த வாரம் வெளியேறுகிறாரா என்பது நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.