கள்ளக்குறிச்சி:
ள்ளக்குறிச்சி கலவரத்தில் டிராக்டர் மூலம் பேருந்துகளை சேதப்படுத்திய இளைஞருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13-ம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீ மதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியின் முன்பு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

இந்த சம்பவத்தில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், டிராக்டர் மூலம் பேருந்துகளை சேதப்படுத்திய ஜெயவேல் என்ற நபர் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, ஜெயவேலை 15 நாட்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.