சென்னை; பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள காலச்சுவடு பதிப்பக ஆசிரியர் எஸ்.ஆர்.சுந்தரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பதிப்புத்துறையில் இந்தியா – பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்கள், பிரான்சு நாட்டின் செவாலியே விருதுக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து,  பதிப்பாசிரியர், கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரத்துக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்து டிவிட் செய்துள்ளார். அதில்,

‘பதிப்புத்துறையில் இந்தியா – பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.