தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர். இந்நிலையில் தானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிக்கலான நிலையில் இருந்ததாக பிரபல நடிகர் காளி வெங்கட் தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் காளி வெங்கட்.

இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே அறிகுறிகளும் இருந்தது. கொஞ்சம் சிக்கலான நிலையில் இருந்ததால உடனே அட்மிட் ஆகனும்னு சொன்னாங்க. சரி அட்மிட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணி ஹாஸ்பிட்டல் போன வழக்கம் போல அங்க இடமில்லை. போன மாசம்தான் இது நடந்தது. டாக்டர் முருகேஷ் பாபுதான் ரொம்ப உதவியா இருந்தாரு. அவரோட அட்வைஸ் கேட்டு தான் நான் நடந்துகிட்டேன் என கூறியுள்ளார் .

இந்த செய்தியை News TM எனும் செய்தி தளம் பகீர் தகவல் என அதை வெளியிட்டுள்ளது . அதற்கு காளி வெங்கட் 1.8M followers இருக்காங்க கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க,முதல்ல வீடியோவ பாருங்க,தொற்று எனக்கு வந்தது மார்ச் மாதம்,அந்த அனுபவத்த இப்போ வீடியோவா போட்ருக்கேன்,அதுல என்ன #பகீர் இருந்தது உங்களுக்கு,எனக்கு தெரிஞ்ச மருத்துவர் இருக்கிற மருத்துவமனைக்கு போனேன் அங்க படுக்கை இல்ல அவ்ளோதான் என கூறியுள்ளார் .