ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார் ஜிப்ரான்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இவர்களைத் தவிர்த்து மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்றுமுன் வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதியின் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

“சாதி மத, அரசியலை தாண்டி இன்னைக்கு தண்ணீர், காற்றை வைத்து தான் இன்று மொத்த உலக அரசியல் நடக்கிறது” என விஜய் சேதுபதி பேசும் வசனத்தோடு துவங்குகிறது டீஸர்.
“இது புறம்போக்கு இடம்.. அதை எப்படி பட்டா போட்டீங்க, 2000 பேருக்கு வேலை கொடுத்துவிட்டு விவசாயம் பண்ணிட்டு இருந்த 50 ஆயிரம் பேரை தெருவில் நிப்பாட்டினா எப்படி சார்” என விஜய் சேதுபதி பேசும் வசனங்கள்.


“நம்ம ஊரு பொம்பளைங்க தண்ணி வண்டி தள்ளிட்டு இருங்காங்க, அந்த (சோலார்) கரெண்ட் கம்பெனி காரன் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணி எடுக்கிறான் பிலேட் கழுவ. பார்த்துட்டு சும்மா இருக்க சொல்ரியா?” என அவர் பேசும் வசனத்தை பார்த்தால், இந்த தண்ணீர் பிரச்சனை பற்றித்தான் இந்த படம் இருக்கும் என புரிகிறது.