பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்க உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதியுடன், நடிகை ஜோதிகா நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் மணிரத்னம் தயாரிக்க உள்ள படத்தில் 4 ஹீரோக்கள் நடிக்க இருக்கிறார்கள். அதில் ஒரு ஹீரோவாக விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  மேலும்,  அரவிந்த் சாமி, ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த மாதம் படபிடிப்பு பணிகள் தொடங்க உள்ள இந்த படத்தில், தற்போது நடிகை ஜோதிகாவும்  நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருமணத்திற்கு பிறகு கடந்த சில வருடங்களாக நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஜோதிகா, கடந்த ஆண்டு  ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு வந்தார். அதையடுத்து, அவர் நடித்துள்ள   மகளிர் மட்டும் படமும் வெளியாக தயார் நிலையில் உள்ளது.

அதைத்தொடர்ந்து இயக்குனர்  பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தில் தற்போது ஜோதிகா நடித்து வருகிறார். இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் அவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியா? அல்லது வேறு கேரக்டரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே மணிரத்னம் தயாரித்த ‘டும் டும் டும் படத்தில் ஜோதிகா நடித்திருந்தாலும், அவரது இயக்கத்தில் நடிக்கும் முதல் படம் இதுதான்.

இந்த படத்தில் ஜோதிகா இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.