வெற்றிக்கோப்பையுடன் தமிழக பெண்கள் அணியினர்

பெங்களூரு,

ர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் வாலிபால் (கைப்பந்து) போட்டியில் தமிழக பெண்கள் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

43-வது தேசிய ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா வில் நடந்தது. இதன் பெண்கள் இறுதிப்போட்டியில் தமிழக அணி 25-13, 25-20, 25-17 என்ற நேர்செட்டில் அரியானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கர்நாடகா அணி 3-வது இடத்தையும், மராட்டிய அணி 4-வது இடத்தையும் பிடித்தன.

ஆண்கள் அணிக்கு வெள்ளிப்பதக்கம்

ஆண்கள் இறுதிப்போட்டியில் தமிழக அணி 25-27, 23-25, 23-25 என்ற நேர்செட்டில் போராடி கர்நாடகாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியது.

அரியானா 3-வது இடத்தையும், உத்தரபிரதேசம் 4-வது இடத்தையும் பெற்றன.

சாம்பியன் பட்டம் வென்ற தமிழக பெண்கள் அணிக்கு ரூ.50 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த தமிழக ஆண்கள் அணிக்கு ரூ.40 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது.