வாஷிங்டன்

மாஸ் அமைப்பு இரு அமெரிக்கப் பணயக் கைதிகளை விடுதலை செய்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்,

கடந்த 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.  இந்த அமைப்ப் எல்லைக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன், பலரைப் பணய கைதிகளாகச் சிறை பிடித்து சென்றது., இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருவதுடன் பணய கைதிகளை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் இதுவரை 200 பேரை பணய கைதிகளாகச் சிறை பிடித்து வைத்துள்ளனர் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் பணய கைதிகளாகச் சிறை பிடித்துச் சென்றவர்களில் அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த 2 பெண்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் மனிதநேய காரணங்களுக்காக அவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர் எனவும் அவர்கள் ஜுடித் தை ரானன் மற்றும் அவருடைய 17 வயது மகள், நடாலி ரானன் எனவும் தெரிய வந்துள்ளது.

எக்ஸ் சமூக ஊடகத்தில் பைடன் வெளியிட்ட செய்தியில்,

“ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 அமெரிக்கர்களுடனும் நான் பேசியுள்ளேன்.

அவர்கள் இருவரும் குணமடையவும் மற்றும் நலம்பெறவும் அமெரிக்க அரசு முழு அளவில் ஆதரவளிக்கும் என அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

அமெரிக்கர்களின் அனைத்து குடும்பத்தினரையும் ஜில் மற்றும் நான் என இருவரும் எங்களுடைய மனதில் மிக நெருக்கத்தில் வைத்திருக்கிறோம்”

என பதிவிட்டு உள்ளார்.