கோல்டுகோஸ்ட் :
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
10 மீட்டர் ஏர்பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜித்துராஜ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
அதுபோல மெகுலி கோஷ் வெள்ளிப் பதக்கம், இவர் 17 வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அபூர்வி சன்டேலா வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
மேலும்,
பளுதூத்துக்குதல் போட்டியில், 105 கிலோ எடை பிரைவில் இந்திய வீரர் பிரதீப் சிங் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார்.
பதக்கப் பட்டியலில் தற்போதுவரை 15 (8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் ) பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
85 பதங்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் 48 பதங்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது.