ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்பாக மத்திய அரசின் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த பல மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை விசாரணை நடத்தினர்.

7 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த விசாரணையை தொடர்ந்து ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் காவலில் வைத்துள்ளனர்.

இதனையடுத்து அமலாக்கத்துறை காவலுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஹேமந்த் சோரனைத் தொடர்ந்து அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநர் மாளிகை சென்ற நிலையில் ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சம்பாய் சோரனை முதல்வராக தேர்ந்தேடுத்துள்ள கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளனர்.

இதனால் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து சம்பாய் சோரன் முதல்வர் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.