சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை, அமைச்சர் ஜெயக்குமாரே தோற்கடிப்பார் என்று டிடிவி  ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர்  தொகுதி இடைத் தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பாக மதுசூதனன் போட்டியிடுவார் என இன்று  நடைபெற்ற அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டார்.

இதுகுறித்து, டிடிவி தீவிர ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்  ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டார்கள், அவர்கள் டிடிவிக்கே ஆதரவு தருவார்கள் என்றார். மேலும், இந்த இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார்  என்றும் கூறினார்.

மேலும், இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக நிறுத்தப்பட்டுள்ள மதுசூதனனை அவர்களது தரப்பினரே தோற்டிகப்பார்கள் என்றும், மதுசூதனனை அமைச்சர் ஜெயக்குமாரே தோற்கடிப்பார் என்றும் ஜெயக்குமாருக்கும், மதுசூதனனுக்கும்தான் தகராறு. எங்களுக்கு தகராறு கிடையாது என்றும் கூறினார்.