டெல்லி: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து உள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறப்பது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள், பிற மாநிலங்களின் பொதுத்தேர்வுகள் அனைத்தும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடத்தப்படும். மாணவர்கள் அது தொடர்பான கேள்விகளை மட்டும் படித்து தேர்வுகளுக்கு தயாரானால் போதும்.

ஆனால், மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது. முழு பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படும் என்று கூறினார்.