புதுடெல்லி:
ந்த ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மற்றும் JEE தேர்வு ஆகியவை ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் சுகாதார அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னரே, தேர்வை தள்ளிவைப்பது தொடர்பான முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும், ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 25 க்குப் பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சில தினங்களுக்கு முன், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிரகாரித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.