டில்லி

ந்தியா கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சி மக்களவை தேர்தல் வேட்பாளரைத் தன்னிச்சையாக அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 29 ஆம் தேதி ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்து வந்த ராஜிவ் ரஞ்சன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிரகு ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று அருணாச்சல பிரதேசம் மேற்கு மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளரை ஐக்கிய ஜனதாதளம் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் அஃபாக் அகமது இது குறித்து கூறுகையில், நிதிஷ்குமார் அறிவுறுத்தலின்படி அருணாச்சல பிரதேசம் மேற்கு மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராகக் கட்சியின் மாநில தலைவர் ரூஹி தாங்குங் நிறுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைமைக்குக் குறிப்பிடத்தக்கப் பதவி வழங்கப்படவில்லை என அக்கட்சியினரிடையே அதிருப்தி நிலவி வருகிறது. ஆனால் சமீபத்தில் நடந்த தேசிய குழுக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசை ஐக்கிய ஜனதாதளம் கடுமையாக விமர்சித்தது. எனவே மக்களிடையே கூட்டணி விவகாரத்தில் நிதிஷ்குமாரின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.