a
முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இரு கட்சி தேர்தல் அறிக்கைகளிலும் இலவச வாக்குறுதிகள் இருந்தன. இவற்றை நிறைவேற்ற எப்படி நிதி ஆதாரம் திரட்டுவீர்கள் என்று கேட்டு இரு கட்சி தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. நாளை மாலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.