a
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப்பொதுத் தேர்தல்கள், 16.05.2016 (திங்கட்கிழமை) அன்றுகாலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறும். 14.05.2016 அன்றுமாலை 6.00 மணிமுதல் வாக்குப் பதிவுகள் முடிவடையும் வரையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள்செயலில் இருக்கும்:-
(1) தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
(2) யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல்தொடர்பையும் இது உள்ளடக்கும்.
(3) பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசைநிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரைசெய்யக் கூடாது.
இந்தவிதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951 ஆம் ஆண்டு மக்கள்பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
(4) தொகுதிவெளியேயிருந்து அழைத்துவரப்பட்ட அனைத்து அரசியல்கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 14.05.2016 அன்று மாலை 6.00 மணிக்குமேல் அந்தத் தொகுதியை விட்டுவெளியேறவேண்டும்.
(5) கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறியப்படும்.
(6) வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரபேச்சாளர்கள் உட்படவாகன அனுமதிகள், 14.05.2016 அன்றுமாலை 6.00 மணிமுதல் செயல் திறனற்றதாகிவிடும்.
(7) வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் பின்வருவனவற்றிற்கு தேர்தல்நடத்தும் அதிகாரியிடமிருந்து தனி அனுமதி பெற உரிமையுடையவராவார். அவை வருமாறு:-
(i) அவரது பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்
(ii) தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான ஒருவாகனம் மற்றும்
(iii) ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கான அவரது பணியாளர்கள் அல்லது கட்சிபணியாளர்களின் பயன்பாட்டிற்கான மற்றொருவாகனம்.
(8) வாக்காளர்களைவாக்குச்சாவடிக்குஅழைத்துவருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்துஅழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லதுஅவரதுமுகவர் வாகனத்தைவாடகைக்குஎடுப்பதற்குஅல்லதுவாங்குவதற்குஅல்லதுபயன்படுத்துவதற்குஎந்தவொருவேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951 ஆம் ஆண்டு மக்கள்பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133 ஆம் பிரிவின் கீழ்தண்டிக்கப்படவேண்டியமுறைகேடானசெயலாகும்.
(9) இரண்டுநபர்களைமட்டுமேகொண்ட, வேட்பாளர்களின் அரசியல்கட்சிகளின் தற்காலிகபிரச்சாரஅலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர்கள்தொலைவில்அமைக்கப்படலாம்.தேவையில்லாதகூட்டத்தைஅவர்கள்அனுமதிக்கக் கூடாது.
(10) 14.05.2016 அன்றுமாலை 6.00 மணிமுதல்16.05.2016 அன்றுமாலை 6.00 மணிவரைகருத்துக் கணிப்புமுடிவுகளைவெளியிடுவதற்கு / கருத்துக் கணிப்புக்களைநடத்துவதற்குதடைவிதிக்கப்படுகிறது. 04.04.2016 அன்றுகாலை 7.00 மணிமுதல் 16.05.2016 அன்றுமாலை 6.30 மணிவரையில்வாக்குப்பதிவிற்குபிந்தையகருத்துக் கணிப்புக்குஏற்கனவேதடைவிதிக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் அதிகாரி
தமிழ்நாடு.