கினாவா

ப்பான் நாட்டில் நதி நீர் சிவப்பாக மாறியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டில் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதனால் உள்ளூர் மக்களும், பார்வையாளர்களும் அச்சமடைந்தனர்.  பிறகு அங்குள்ள ஒரு மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பு ஒன்றில் இருந்து உணவில் நிறத்திற்காகச் சேர்க்கப்படும் சாயம் கசிந்ததால் நதியின் நிறம் மாறியதாகத் தெரிய வந்துள்ளது,

இது நேற்று முன்தினம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. காலை 09:30 மணியளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  பீர் தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் நிறுவனம் ஒரு அறிக்கை  வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், உணவுகளில் நிறத்திற்காகச் சேர்க்கப்படும் சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது. அத்துடன் மிகப் பெரிய பிரச்சனை மற்றும் கவலையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறது.