ஜம்மு:

ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பரூக் அப்துல்லா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருந்த தாரிக் ஹமீத் காரா கடந்த செப்டம்பரில் பதவி விலகினார். இதனால் இந்த தொகுதிக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நசீர் அகமதுகான் ஆகியோர் போட்டியிட்டனர்.

ஸ்ரீநகர் தொகுதியில் கடந்த 9-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பெரும் வன்முறைக்கு நடுவே வெறும் 6.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில் பரூக் அப்துல்லா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.