ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரர்கள், பொது மக்கள் என 6 பேர் பலியாகினர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந் நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த ராகேஷ் தோவல் உயிரிழந்தார். 2 வீரர்களும் பலியாகினர். பாகிஸ்தானின் தாக்குதலில் பொதுமக்கள் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்துள்ளது. அதில் 8 பாகிஸ்தான் வீரர்கள்  உயிரிழந்திருக்கலாம் என்று ராணுவ வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.