ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ககாபோரா பகுதியில் உள்ள தோபி மொஹல்லாவில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், புல்வாமாவின் சம்பூராவில் வசிக்கும் இஷ்ரத் ஜான், குலாம் நபி தார்  ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.