புதுடெல்லி:
ல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை இன்று வர உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் எருது வண்டிப் பந்தயம் ஆகியவற்றை நடத்த தமிழகம், மகாராஷ்டிரா அரசுகள் சட்டம் இயற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடத்தப்பட உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி பீட்டா, கூபா உள்ளிட்ட 15 அமைப்புகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதமன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று விசராணை வருகிறது.

மேலும் மத்திய அரசின் காட்சி படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.