ராஞ்சி: சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாட்டுத்தீவன ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி  சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி நிறுவனருமான லாலு பிரசாத்தின் உடல்நிலை வயது முதிர்வு காரணமாக  பாதிக்கப்பட்டு உள்ளது. fடந்த இரு நாட்களுக்கு முன்பு  அவருக்கு திடீரென சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து,  அவர் உடடினயாக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்தலாலுவின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் சந்தித்தனர்.  இதையடுதது, லாலுவின் உடல்நிலை சீராக வருவதாக மருத்துவமனை கூறியது.ஆனால், லாலுவின் மகனான தேஜஸ்வி யாதவ், தந்தையின் உடல்நிலை மோசமாகி வருவதாக கூறினார்.

இந்த நிலையில், தற்போது, லாலுவை மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற அதிகாரிகள், மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் மாற்றப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.