புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டையில் ஜெய் ஹிந்த் என்ற ஒலி, ஒளி காட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.

3 பகுதிகளைக் கொண்ட இந்நிகழ்ச்சி செங்கோட்டையின் உள்ளே உள்ள பல்வேறு நினைவுச்சின்னங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மராட்டியர்களின் எழுச்சி, 1857-ம் ஆண்டு சுதந்திரப் போர், இந்திய தேசிய ராணுவத்தின் எழுச்சி, ஐஎன்ஏ சோதனைகள் மற்றும் சுதந்திரத்திற்கான போராட்டம் ஆகியவை ஒளிபரப்பப்பட உள்ளது.

17-ம் நூற்றாண்டு முதல் தற்போது வரையிலான இந்தியாவின் வீரம் மற்றும் வரலாற்றின் பெருமை மிகு விளக்கக்காட்சியாக இது அமைய உள்ளது.