சாந்திப்புறம்

ந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சாந்திப்புறத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்றார்.

அப்போது பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 215 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

மேலும், 0.6 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் வகையில், பாலாற்றில் தடுப்பணை கட்டப்படவுள்ளதாகவும், விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.