திருவனந்தபுரம்

ந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

 

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரசும் எதிரெதிராக போட்டியிடுகின்றன.  நேற்று கம்யூனிஸ்ட் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.

அந்த தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் தொகுதியான வயநாடும் அடங்கும். வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவியும், இந்தியத் தேசிய மாதர் சம்மேளன பொதுச்செயலாளருமான ஆனி ராஜா போட்டியிடுகிறார்.

மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் வெற்றி பெற்ற திருவனந்தபுரம் தொகுதியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். பன்னியன் ரவீந்திரன் போட்டியிடுகிறார்.

தவிர திருச்சூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சுனில்குமாரும், மாவேலிக்கரா தொகுதியில் இளைஞர் பிரிவு தலைவர் அருண்குமாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.