தெலுங்கானா:
ந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியின் சகோதரியான ஒய்‍.எஸ்‍.ஷர்மிளா ரெட்டி, தனது தந்தையின் பிறந்தநாளான ஜூலை 8ம் தேதி தெலங்கானாவில் புதிய கட்சியை துவக்குகிறார்.

தெலங்கானாவின் கம்மம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதனைக் கூறிய அவர், கட்சியின் பெயர், சின்னம்,கொடி, மற்றும் கட்சியின் கொள்கைகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என கூறியிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் இடம்பெற்ற சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் என்ற வசனத்தை பேசி தனது ஆதரவாளர்களை அவர் உற்சாகப்படுத்தினார்.