கொழும்பு: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய கொழும்பு ஜாப்னா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும்போது,  எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி  இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில்,   எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 19 மீனர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட  தமிழக மினவர்கள் அனைவரும்  கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு ஜாமின் வழங்க ரூ.1கோடி செலுத்த வேண்டும் என நீதிபதி கூறினார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. . இதற்கு  தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்தியஅரசும் இலங்கை அரசுடன் பேசியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, இன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட 19 தமிழக மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய நீதிபதி கஜநிதிபாலன்  உத்தர விட்டார்.  இதனையடுத்து அங்குள்ள வழக்கமான நீதிமன்றம் மற்றும் சிறைத்துறை நடவடிக்கைகள் முடிந்து,  19 மீனவர்களும் இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு ஓருசில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.