சென்னை:

ரும் ஞாயிற்றுக்கிழமை விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ வெளியாக இருந்த நிலையில், படத்தின் இணை தயாரிப்பாளர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பிகில் படம் வசூல் தொடர்பாக மாஸ்டர் படத்தில் கலந்துகொண்ட நடிகர் விஜயை வருமான வரித்துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும்,  படத்தை தயாரித்த ஏஜிஎஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித் துறையினா் திடீா் சோதனை செய்தனா்.  விஜய்யிடமும் ஒருநாள் முழுவதும் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், தற்போது  மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். து. மாஸ்டர் படத்தின் வியாபாரம் குறித்து லலித் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை விஜயின்  மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா  நடைபெற உள்ளது. இந்த சூழலில் வருமானவரிச் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருடன் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள்.. இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.படம் அடுத்த மாதம் ( ஏப்ரல்) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.