டெல்லி: ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை மத்தியஅரசு வெளியீட்டுள்ளது. இதன்மூலம், மத்தியஅரசு ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்காது என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வருமான நோக்கில், அதற்கு மேலும் கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட உள்ளது.

ஆன்லைன்  கேமிங்கால் ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதுபோன்ற  தற்கொலைகள் நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனால், ஆன்லைன் கேமை தடை செய்ய வேண்டும் என தமிழகஅரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால், தமிழகஅரசும், ஆன்லைன் தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால், இதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்க மறுத்து வருகிறார்.

இந்த நிலையில், ஆன்லைன் கேமிங் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வரைவு விதிமுறைகளை மத்திய தகவல் மற்றும் தொழிநுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் கேமிங்கிற்கான ஒழுங்குமுறைக் கொள்கையை பரிசீலிப்பதாக அமைச்சகம் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இது வந்துள்ளது.

மத்தியதகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சுய ஒழுங்குமுறை அமைப்பு புதிய வரைவு விதிகளை வெளியிட்டு உள்ளது. அதாவது ஐடி (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021-க்கான வரைவு திருத்தங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்,  புதிய வரைpவ விதிகளின்படி,

“விதிமுறைகள் மிகவும் எளிமையானவை, ஆன்லைன் கேமிங் பந்தயம் மற்றும் கேமிங் பந்தய விளம்பரங்கள் தடை (sic) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன,”  “ஒரு சுய-ஒழுங்குமுறை அமைப்பு வடிவமைக்கப்பட்டு, இணையத்தில் அனுமதிக்கப்பட்ட ஆன்லைன் கேமிங் இடைத்தரகர் என்ன என்பதைத் தீர்மானிப்பதற்குப் பொறுப்பான விதிகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றவர், பந்தயத்தை ஒரு விளைவாக அனுமதிக்கும் எந்த ஆன்லைன் கேமும் தடைசெய்ய முடியாத பகுதியாகும் என்று கூறினார்.

மேலும் புதிய வரைவு விதிகளில்,  “எந்த விளையாட்டிலும் பந்தயம் கட்டுவதை” முற்றிலும் தடை செய்கிறது. “இந்த விதிகள் விளையாட்டை அல்லது திறமை விளையாட்டை ஒழுங்குபடுத்துவதில்லை. (தி) விதிகள் பந்தயத்தை மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. இது அடிப்படையில் எந்த விளையாட்டிலும் பந்தயம் கட்டுவதற்கான தடையாகும்

மேலும், ஆன் கேமிங் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படுகின்றன. . விளையாட்டின் முடிவை பந்தயம் கட்ட உங்களை அனுமதிக்கும் எதுவும் அனுமதிக்கப்படாது.

விளையாட்டாளர்களுக்கான சரிபார்ப்பு மற்றும் கடுமையான KYC விதிமுறைகள் இந்த விதிகளின் முக்கிய கூறுகளாக இடம்பெற்றுள்ளன. இதன்படி ஆன்லைனில் விளையாடும் நபர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகிறது.

விதிகள் குறைகளை நிவர்த்தி செய்ய சுய ஒழுங்குமுறை பொறிமுறையையும் முன்மொழிகின்றன. அதாவது, ஆன்லைன் விளையாட்டுகளில் தெரிவிக்கப்படும் புகார்களை, குறைகள் தீர்க்கும் குழு மூலம் உடனடியாக தீர்க்கவேண்டும்.

ஆன்லைன் விளையாட்டு தளங்கள், இந்தியாவில் சட்டம் ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும். அதாவது,  ஆன்லைன் பெட்டிங் மற்றும் கேம்பிளிங் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் நபரின் வயது மற்றும் விதிகளை பின்பற்றி நடப்பதற்கான சட்டங்களுக்கு கட்டுப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகள் இறுதி செய்யப்படுவதற்கு முன்பு இந்த மாதம் விளையாட்டாளர்கள், ஸ்டார்ட்அப்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களுடன் அமைச்சகம் “விரிவான ஆலோசனைகளை” நடத்தும். அதைர்ததொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதி விதிகள் அறிவிக்கப்படும்.

“இந்த விதிகள் நுகர்வோர் ஆர்வத்தை உறுதி செய்வதில் நீண்ட தூரம் செல்லும், அதே நேரத்தில் தொழில்துறை பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் வளர உதவும். இந்த விதிகள் தேச விரோத மற்றும் சட்டவிரோத கடல் சூதாட்ட தளங்களின் அச்சுறுத்தலைத் தடுப்பதற்கும் ஒரு தொடக்கமாக இருக்கும்,” என்றார்.

இந்தியாவில் ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினை – திறன் அடிப்படையிலான விளையாட்டுகள் மற்றும் வாய்ப்பு விளையாட்டுகளுக்கு இடையே விதிகள் வேறுபடுத்தாது என்று அமைச்சர் கூறினார்,

மேலும் “எந்தவொரு ஆன்லைன் விளையாட்டிலும் பந்தயம் கட்டுவதைத் தடுப்பதில்” தான் ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். வயது வரம்பு மற்றும் சுய ஒழுங்குமுறை ஆணையத்தின் குறிப்பிட்ட கூறுகள் பற்றிய கூடுதல் விவரங்கள் ஜனவரியில் விவாதிக்கப்படும், என்றார்.

ஆன்லைன் விளையாட்டுகளில் நிறைய உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் நிகழ்ந்ததையடுத்து மத்திய அரசு இந்த வரைவு விதிமுறைகளைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென வெளியிட்டுள்ளது.