சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்தியஅரசு ரூ.10.76 லட்சம் கோடி கொடுத்ததாக கூறுவது பொய் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் வரிப் பகிா்வாக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுத்த தொகை ரூ.5.5 லட்சம் கோடிதான் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இதுதொடர்பலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது X பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கூறியிருப்பதாவது,

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளா்ச்சிக்காக ரூ.10.76 லட்சம் கோடியை மத்திய அரசு அள்ளிக்கொடுத்ததாக பாஜக கூறுகிறது. இது அப்பட்டமான பொய்க்கணக்கு. மத்திய அரசு நிதிகளை வழங்குவதில் இரு கூறுகள் உள்ளன.

ஒன்று, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நேரடியாக வழங்கும் நிதி. அதாவது, மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிா்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது.

இதன்படி, உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.18.5 லட்சம் கோடியை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ ரூ.5.5 லட்சம் கோடிதான்.

மற்றொன்று, மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக் கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு. இதில் பாஜக பல பொய்க் கணக்குகளைக் காட்டியுள்ளது. இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.1,960 கோடி, ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ரூ.63,246 கோடி, சாகா்மாலா திட்டத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி என்று பட்டியலிட்டு ஒட்டுமொத்த தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.

இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்ட நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சா் களாவது விளக்க முன்வருவாா்களா?

தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சிக்கு சிறுதொழில் முனைவோா் பெரும் பங்கு வகிக்கிறாா்கள். அவா்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய ரூ.2.5 லட்சம் கோடி கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதியாக வழங்கியது போன்று பாஜக அரசு கூறிக் கொள்கிறது. இவ்வாறு எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக  நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், டது. தென்னிந்தியாவில் புல்லட் ரயில் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. டெல்லி பாஜக தலைமையகத்தில் இன்று மோடியின் உத்தரவாதம் 2024 (Modi Guarantee 2024) என்ற பெயரில் வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் ‘தேர்தல் அறிக்கை’-ஐ பிரதமர் மோடி வெளியிட்டார்.

பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய குறிக்கோள் மகளிர், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுதான் என குறிப்பிட்டுள்ளனர். பாஜக இதனை புரட்சிக்கரமான தேர்தல் அறிக்கை என கூறிய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதுகுறித்து பேசிய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, விவசாயிகளின் வருவாய் இரு மடங்காக்கப்படும் என்றும் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் நேரந்தி மோடி முன்னரே வாக்குறுதி அளித்திருந்தார், அது நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும்,,”இதுதான் மோடியின் உத்தரவாதம். நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை தரும் எந்த ஒரு பெரிய பணியையும், திட்டத்தையும் அவர் தனது பதவிக்காலத்தில் செய்யவில்லை என்பது இந்த தேர்தல் அறிக்கை மூலம் தெரியவருகிறது. இளைஞர்கள் வேலை தேடி அலைக்கின்றனர், பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஆனால் அவர் எதைப் பற்றியும் கவலைப்படுவதே இல்லை” என்றார்.