மும்பை: வரும் 2022ம் ஆண்டு இந்தியாவில் ஆசியக் கோப்பை கால்பந்து நடக்கவுள்ள நிலையில், இந்திய பெண்கள் அணிக்கு சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார் இந்திய ஆண்கள் அணி கேப்டன் சுனில் செத்ரி.
அவர் கூறியுள்ளதாவது, “இத்தொடரில், இந்தியப் பெண்கள் அணி, ஆசியாவின் சில சிறந்த அணிகளை எதிர்கொண்டு ஆடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இது உண்மையிலேயே ஆச்சர்யகரமானது மற்றும் இத்தகைய ஒரு நிலையைத்தான் நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள்.
ஆசிய கோப்பை தொடருக்காக, இப்போதிருந்தே தயாராகுங்கள். ஆட்டத்தின் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள். ஏனெனில், இப்படியான பெரிய தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு உங்களுக்கு அடிக்கடி அமையாது.
சொந்த மண் என்பதால், நெருக்கடியக் அதிகமிருக்கவே செய்யும். எனவே, கால்பந்து போட்டிகளை உற்சாகமாக விளையாடுங்கள்” என்றுள்ளார்.