பெங்களூரு

ன்று முதல் நிலவின் தென் துருபத்தில் சூரிய ஒளி விழ உள்ளதால் லேண்ட் ரோவரை மீண்டும் இயங்க வைக்க இஸ்ரோ முயற்சியை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஜூலை 14 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 23 அன்று மாலை 6.04 மணிக்கு இது புவி வட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையைக் கடந்து, விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து நிலவில் வெற்றிகரமாகத் தரை இறங்கியது.

சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. லேண்டர் ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள் என்பதால். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியைத் தொடங்கியது.

லேண்டர் ரோவரில் உள்ள ‘லிப்ஸ்’ எனப்படும் ‘ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி’, நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்து அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதையும் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேற்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

நிலவில் நாள் முடிவடைந்து  இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை. எனவே இம்மாத தொடக்கத்தில் நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நிலவில், முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள்,

”இன்று சூரிய உதயம் ஆரம்பிக்கும்போது, உறக்க நிலையில் இருக்கும் லேண்டரும், ரோவரும் எழுந்து மீண்டும் ஆராய்ச்சி பணியில் ஈடுபடும். அதன் சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி செயல்பாட்டிற்கு வரும். இதனால் நிலவின் தென் துருவத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் போது கூடுதலான அறிவியல் தகவல்கள் நமக்குக் கிடைக்கும்”

என்று நம்பிக்கை தெரிவித்தனர்.