பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியில், சென்னை – கேரளா அணிகள் மோதிய ஆட்டம் கோல்கள் இன்றி டிராவில் முடிவடைந்தது.

இப்போட்டியில், சென்னை அணிக்கு கோல் போடுவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அவை அனைத்தையும் வீணாக்கியது சென்னை அணி.

ஆட்டத்தின் 14வது நிமிடம், 18வது நிமிடம், 25வது நிமிடம், 60வது நிமிடம், 67வது நிமிடம் ஆகிய சந்தர்ப்பங்களில் கிடைத்த கோல் வாய்ப்பை சென்னை வீரர்கள் தவறவிட்டனர்.

இவை அனைத்திற்கும் மேலாக, ஆட்டத்தின் 74வது நிமிடத்தில், சென்னை அணிக்கு அருமையான பெனால்டிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதையும் வீணாக்கினார் சென்னையின் சில்வெஸ்டர்.

அதேசமயம், கேரள அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இரு அணிகளுமே தற்காப்பில் கவனம் செலுத்தியதால், கோல்கள் எதுவுமின்றியே ஆட்டம் டிராவில் முடிந்தது.