டாக்கா: வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில்  இந்திய வீரர்கள் ருத்ர தாண்டம் அடியுள்ளனர்.  இஷான் கிஷான் இரட்டை சதம், கோலி ஒற்றை சதம் அடித்து சாதனைகளை செய்துள்ளனர். இதன் காரணமாக,  இஷான் கிஷன் உலக சாதனை வரிசையில் இடம் பிடித்துள்ளார். அதுபோல, ஒருநாள் போட்டியில் 400 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி பெற்று தொடரை சொந்தமாக்கியது. இதனால், இன்றைய 3வது ஒருநாள் போட்டியிலாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற  நிலையில் இந்தியா ஆடியது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியினர் அதிரடியாக ஆடினர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய  ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடத் தொடங்கினார். தனது முழு வேகத்தையுத் பேட்டில் காண்பித்து வேகமாக ஸ்கோரை உயர்த்தத் தொடங்கினார். அவரது ஆட்டம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், அவருக்கு மேலும் ஊக்கத்தையும் கொடுத்தது.

ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய இஷான் கிஷன் 126 பந்தில்  24 பவுண்டரி, 10 சிக்ஸர்களுடன் 131 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷானின் இரட்டை சதம் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.   அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய கோலியும் 113 ரன்கள் எடுத்த வெளியேறினார். கோலியும் வெகுநாட்களுக்கு பிறகு இன்று சதத்தை நிறைவு செய்துள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஜோடி  இணைந்து சிறப்பாக ஆடினார்.

பின்னர் இஷான் கிஷானுக்கு பதிலாக களமிறங்கிய  ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் நிலைத்து ஆடிய விராட் கோலி 91 பந்துகளில் 113 ரன்களுக்கு வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களும், அக்சர் படேல் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 409 ரன்கள் எடுத்தது. 410 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி விளையாடி வருகிறது.

ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. அதிகமுறை 400 ரன்கள் எடுத்த பட்டியலில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்துள்ள இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியின் சாதனையை சமன் செய்தது.

தொடக்கம் முதல் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷன் 49 பந்தில் அரைசதம் அடித்தார். அதன் பின்னர் அடித்து ஆடிய இஷான் கிஷன் பங்களாதேஷ் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டார். இஷான் கிஷன் 90 ரன்களில் இருந்த போது சிக்ஸர் அடிக்க முயற்சி செய்த போது அவுட் நிலைக்கு சென்ற நிலையில், அதிர்ஷ்டவசமாக தப்பினார்.  இதன் காரணமாக,  இஷான் கிஷன்  சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தினை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து  ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன் 126 பந்தில் இரட்டைச் சதம் விளாசி அதகளப்படுத்தியுள்ளார்.

இஷான் கிஷானின் இந்த இரட்டைச் சதத்தின் மூலம் இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும், இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான சச்சின், சேவாக் ஆகியோரது சாதனையை சமன் செய்துள்ளார். சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார். மேலும் குறைந்த பந்தில் இரட்டைச் சதம் விளாசிய வீரர் எனும் உலக சாதனையையும் இஷான் கிஷான்  படைத்துள்ளார்.