ரோடு

திமுகவைச் சேர்ந்த ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி செய்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரோடு தொகுதி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி பிரசாரத்தை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக கணேசமூர்த்தி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நலம் கருதி மேல்சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

கணேசமூர்த்தி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததால் இன்று சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. ஈரோட்டில் இந்த சம்பவம் கடும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.