நாகர்கோவில்:

ன்னியாகுமாரி மாவட்டத்தில்  சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என்று அவர் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கூட்டணியில் இழுபறி தொடர்வது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக பாஜக இடையே கூட்டணி முடிவு செய்யப்பட்டு விட்டதாக பரபரப்பு  தகவல்கள் வெளியாகி வருகிறது. அதுபோல திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு  இழுபறியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில்  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியார்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் தெரிவித்த அமைச்சர்,  வருகிற மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவும் கிடையாது என அறிக்கை மூலம் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது பற்றி கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்காது. இது குறித்து நான் அவரிடம் பேசிவிட்டு கூறுகிறேன் என்றார்.

மேலும்,  அதிமுக, பாஜ கூட்டணி குறித்த கேள்விக்கு, தற்போது  எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டு எஸ்கேப்பானார்.