இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானிய இராணுவத் தலைவர் முகமது பகேரி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டத்தில் தொடர்புடைய இரண்டு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

ஈரானிய அணு ஆயுதங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. தெஹ்ரான் மீதான தாக்குதலை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

இது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை மேலும் அதிகரித்துள்ளது.

மற்றொரு ஆதாரத்தின்படி, ஈரானின் துணை ராணுவப் புரட்சிகர காவல்படையின் தலைவரான ஜெனரல் ஹொசைன் சலாமி, இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை…

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் நெருக்கடியை அடுத்து, ஈரான் மற்றும் ஈராக்கில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மற்றும் ஈராக்கில் உள்ள இந்திய தூதரகங்கள் இது தொடர்பாக தனித்தனி அறிக்கைகளை வெளியிட்டு, இந்திய குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன. தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். மேலும், இந்திய தூதரகத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.